( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .
[ தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]
அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உர்து மொழியை தாருல் உலூம் தேவ்பந்தின் உலமாக்களிடம் இருந்து கற்றார்கள்
[ பராஹீனே காதியா,பக்கம் 26 ]
நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்று தான் கண்ணியமளிக்கப்பட வேண்டும் .[ தக்வியத்துல் ஈமான் , பக்கம் 58 ]
அல்லாஹ் நாடினால் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்று கோடானு கோடி பேர்களை உருவாக்குவான் . [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 16 ]
பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59 ]
அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள். [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 29 ]
இறைத்தூதர்கள் பொய்யை விட்டு தூய்மையானவர்களாக
இருக்க வேண்டிய தேவைஇல்லை .
[ தஸ் பியதுல் அகாயித்,பக்கம் 25]
ஒரு நபியை ஒரு மனிதனைப் போல மட்டும் தான் புகழ வேண்டும் ,இன்னும் அதற்கு குறைவாகவே புகழவேண்டும் .
[தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 35 ]
படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும் ,எல்லாரும் இல்ம் என்னும் அறிவற்றவர்களாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள் .
[தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 3]
படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும், அல்லாஹ்வின் திருமுன் ஒரு செருப்பு தைக்கும் செம்மானை விட கீழாகவே உள்ளனர் .
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 14]
நபிமார்களை தாகூத் (ஷைத்தான்) என்று அழைக்க அனுமதி உள்ளது .[தப்ஸீர் புல்காதுல் ஹைரான் ,பக்கம் 43 ]
ஒரு நபிக்கு தனது உம்மதிடம் உள்ள அந்தஸ்து ஒரு கிராம தலைவரைப் போன்று அல்லது நிலக்கிழார் போன்றது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 61 ]
யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]
நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது நுண்ணறிவை இழந்து விட்டார்கள் .
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 55 ]
உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர் .[தக்தீருன்னாஸ் ,பக்கம் 5 ]
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களை ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் இருந்து கீழே விழாமல் ஒரு தேவ்பந்த் உலமா காப்பாற்றினார்.
[புல்காதுள் ஹைரான் ,பக்கம் 8 ]
லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் எந்த கேடும் இல்லை .
[ரிஸாலா அல் இம்தாத்,பக்கம் 35 சபர் மாதம் 1336 ஹிஜ்ரி ]
மீலாதுந்நபி கொண்டாடுவது இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது போன்றது .
[பதாவா மீலாத் ஷரீப் ,பக்கம் 8 / பராஹீனே காதியா ,பக்கம் 148 ]
நபிகள் நாய
கம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஜ்ஜாலும் வாழ்வைக் கொண்டு நன்மாரயம் பெற்றவர்கள்.எந்த பண்புகள் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களாக உள்ளதோ அவை தஜ்ஜாலி டமும் உள்ளன. [ஆபே ஹயாத் ,பக்கம் 69 ]
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பும் எதுவும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது .
[ஆபே ஹயாத் ,பக்கம் 69 ]
அல்லாஹ்வின் திருமுன் ,நபிமார்களும் வலிமார்களும் தூசுக்கு சமம் [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 54 ]
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு சகோதரர் என்று அழைப்பது சரியானதே .
[பராஹீனே காதியா ,பக்கம் 3 ]
எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால் குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் .
[தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]
தரூத் தாஜ் விரும்பத்தக்கதல்ல,இன்னும் அதை ஓதுவதும் கூடாது .[ பழாயிலே தரூத் ஷரீப் ,பக்கம் 73 மற்றும் தஸ்கிரதுர் ரஷீத் பாகம் 2,பக்கம் 117]
தேவ்பந்தைச் சார்ந்த ஒரு வலிக்கு ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
குளிப்பாட்டி ஹஜ்ரத் பாத்திமா ரலிய்யல்லாஹு அன்ஹு அவர்கள் ஆடை போர்த்திவிட்டார்கள் .
[சிராதே முஸ்தகீம் ,பார்சி பக்கம் 164,உர்து பக்கம் 280 ]
மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.
[பதாவா அஷ்ராபியா,பாகம் 2,பக்கம் 58.பதாவா ரஷீதியா பாகம் 2 பக்கம் 144 மற்றும் 150,பாகம் 3 பக்கம் 93,941 ]
காகம் உண்பது ஆன்மீகரீதியாக நன்மைபயக்கும் செயலாகும்.
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 1301 ]
வலிமார்களை அல்லாஹ்வின் படைப்புகள் என்று நன்கு உணர்ந்த நிலையிலும் விளிப்பது விலக்கப்பட்டுள்ளது .
[தக்வியதுல் ஈமான் பக்கம் 7 ]
ஜனாஸா தொழுகைக்குப்பின் துஆ ஓதுவது கூடாது .
[பத்வா ஜமீல் அஹ்மத் தான்வி ,ஜாமிஆ அஷ்ரபியா ,லாகூர் ]
ஹிந்துக்களின் திபாவளி ,ஹோலி பண்டிகைகளின் போது வழங்கப்படும் பரிசுகளையும்,உணவையும் முஸ்லிம்கள் வாங்குவது கூடும்.
[ பதாவா ரஷீதியா ,பாகம் 2,பக்கம் 130 ]
காபிர்கள் வட்டி பணம் மூலம் வைத்திருக்கும் குடிநீர் பந்தல்களில் முஸ்லிம்கள் தண்ணீர் குடிப்பது கூடும்.
[பதாவா ரஷீதியா ,பாகம் 3,பக்கம் 113,114 ]
அஸ்தக்பிருல்லாஹ் !!!
லா ஹவ்ல வலா ஹுவத்த இல்லா பில்லாஹ் !!!
யா அல்லாஹ் உன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ﷺ அவர்கள் பொருட்டால் இந்த தேவ்பந்திய வஹாபிய கொள்கைகளை விட்டும் காப்பாயாக !!
ஆமீன் ஆமீன் யா-ரப்பல் ஆலமீன்
அல்-மதத் யா-ஸெய்கீ லாதன்சானீ.
( நன்றி ; Sufi manzil )
கருத்துரையிடுக