24/03/2018

மதீனா

மதீனா மதீனா என்றே எந்தன் உயிர் வாழும்
அந்த மதீனாவில் தான் ஒரு நாள் எந்தன் உயிர் போகும்

மாநபி நடந்த காலடி மண் அது பொன்னாகும்
அந்த காருண்யர் வாழும் மதீனா எந்தன் கண்ணாகும்

மாநபி காலடி மண்ணில் அடியேன் அடங்கிடனும்
நாளை மஹ்ஷரில் யானும் நபியுடன் சேர்ந்தே எழுந்திடனும்

பூமியில் சுவனம் மதீனா சில நாள் வாழ்ந்திடனும்
அந்த பூமான் நபியின் அணைப்பில் எங்கும் இருந்திடனும்

இதயத்தின் வேந்தரை உதயத்தில் ஏந்திய மண்ணாகும்
ஒரு சுவனத்தின் துண்டு மதீனத்தில் உண்டது மெய்யாகும்

உஹது மலை சமம் ஈமான் அங்கே உண்டாகும்
நம் உத்தம நபியை சுற்றும் இதயம் வண்டாகும்

மதீனத்து மண்ணை எடுத்து சுர்மா இட வேண்டும்
அந்த மகிமை பேற்றால் கண்கள் சுடரொளி பெற வேண்டும்

மதீனத்து தென்றலில் மனமுடன் குளித்து விடவேண்டும்
அந்த குளியலில் அடியேன் பாவங்கள் ஓடி விடவேண்டும்

கருணை நபிமேல் கோடி ஸலாம் மொழிந்திட வேண்டும்
எந்த காலமும் முழங்கும் ஸலவாத்தை செவி மடித்திடனும்

அருள் நபி மஸ்ஜிதில் ஸஜ்தா பல செய்திடவேண்டும்
அந்த ஆனந்தக் களிப்பில் அங்கேயே வாழ்ந்துயிர் விட வேண்டும்

பெற்றவர் உற்றவர் அனைவரை விட நபி மேலாகும்
இறை பேரருள் கொடையாம் உயிரை விட நபி மேலாகும்

படைப்புகள் யாவும் அழிந்தாலும் நபி புகழ் வாழும்
அந்த பெருமான் வாழும் மதீனா எந்தன் தலை போலும்என்

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search