கப்ரு ஸியாரத்திற்கு சென்றால் யாஸீன்வேண்டும்
"எவராவது கப்ரு ஸ்தானங்களுக்குச் சென்று ஸூரத் யாசீன் ஓதினால் கப்ராளிகளைத் தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மிர்காத் பாகம் 4 பக்கம் 382)
பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய நன்மைகள்
ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "யாரசூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெற்றோர்கள் மரணித்த பின்பு அவர்களுக்காக பிள்ளைகளாகிய நாங்கள் செய்யவேண்டிய நன்மைகள் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம், இருக்கிறது. அவர்களுக்காக தொழுது நன்மை சேர்த்தல், அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுதல், அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், அவர்களின் சுற்றத்தினர்களுடன் சேர்ந்து நடந்துகொள்ளுதல், அவர்களின் தோழர்களுக்கு சங்கை செய்தல்" என்று கூறினார்கள். (அபூதாவூது, இப்னு மாஜா, மிஷ்காத் பக்கம் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலா)
கப்ருகளை உதாசீனம் செய்யாதீர்கள்
1. "கப்ருகள் மீது உட்காராதீர்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312)
2. "உங்களில் ஒருவர் நெருப்பு கங்கின் மீது அமர்ந்து உடையும் உடலும் கரிந்து போவது ஒரு கப்ரின் மீது அமர்வதை விட சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312 கிதாபுல் ஜனாஇஸ்)
3. நான் ஒரு கப்ரின் மீது சாய்ந்து கொண்டிருந்ததை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். அப்போது, "இந்த கப்ருடையவருக்கு நோவினை கொடுக்காதே" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மிஷ்காத் பக்கம் 149 பாபு தப்னில் மய்யித்தி)
4. ஒரு மனிதன் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித கப்ரின் மீது அசிங்கப் படுத்திவிட்டான். உடனே பைத்தியம் பிடித்து நாய் ஊளையிடுவது போன்று ஊளையிட்டுக் கொண்டிருந்தான். சில தினங்களில் இறந்து விட்ட அவனின் கப்ரிலிருந்தும் ஊளைச் சத்தம் கேட்கப்பட்டது. (நூருல் அப்ஸார் பக்கம் 134)
கருத்துரையிடுக